Thursday, September 3, 2015

virunthu vaippome nalla virunthu vaipome


விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
  அல்-லே-லுயா அல்லேலுயா (2)

விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
ஜாதிமதம் பேதமின்றி அனைவருக்கும் நல்லதொரு
கிறிஸ்மஸ் விருந்து வைப்போமே - அல்-லே-லுயா

1. பெத்தலையில் பிறந்தாரே அல்லேலுயா
மாட்டுக்கொட்டிலில் பிறந்தாரே அல்லேலுயா
பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே
மாட்டுக்கொட்டில் பிறந்தவரை போற்றி துதிமனமே
மாட்டுக்கொட்டில் ஏழ்மை கோலம்
தாழ்மையுள்ள முன்னணையில் நீர் பிறந்தீரே
விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே (2)
பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே - விருந்து

2. ஆயர் பாலர் தேடினர் அல்லேலுயா
பாலன் இயேசு தோன்றினார் அல்லேலுயா
கன்னி மகவாய் பிறந்தவரை போற்றி துதிமனமே
ஏழ்மை கோலம் ஏற்றவரை போற்றி துதிமனமே
மேய்ப்பர்களும் ஞானியரும்
வந்தும்மை பணிந்து தொழுதனரே
அன்று சொன்ன தீர்க்கனின் மொழி நிறைவேறுதே (2)
பாவம் போக்கவே நீர் பிறந்தீரே - விருந்து

3. ஆடுவதும் பாடுவதும் கிறிஸ்மஸ் ஆகுமோ
உண்டு உடுத்தி மகிழ்ந்து விட்டால் கடமை தீருமோ
இயேசுவை போல் கிறிஸ்தவர்கள் அன்புகாட்டனும்
கிறிஸ்தவரின் தாழ்மை இந்த உலகம் போற்றனும்
உன்னைப்பார்த்து உலகில் வாழும் மக்கள் திருந்தனும்
உனது உருவில் இயேசு இந்த உலகம் பார்க்கனும் - விருந்து

No comments: