Thursday, September 3, 2015

IYAYAAH NAAN ORU MAAPAAVI ENNAI

ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னை
ஆண்டு நடத்துவீர், தேவாவி!

சரணங்கள்

1. மெய் ஐயா, இது தருணம், ஐயா - என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி - வெகு
அவசியம் வரவேணும், தேவாவி! --- ஐயையா

2. எனதிருதயம் பாழ்நிலமாம் - ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழி நடத்தும் - ஞான
தீபமே, உன்னத தேவாவி! --- ஐயையா

3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் - தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகன சத்த மனம் தருவீர் - நீர்
வல்லவராகிய தேவாவி! --- ஐயையா

4. பத்தியின் பாதை விலகாமல் - கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க - என்னைத்
தாங்கி நடத்திடும், தேவாவி! --- ஐயையா

5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் - என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்,
இன்பமிகு மெய்ச் சமாதானம் - இவை
யாவும் தருவீரே, தேவாவி! --- ஐயையா

6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து - அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத் துய்யனே, வந்துதவும் - நீர்
வராமல் தீராதே, தேவாவி! --- ஐயையா

No comments: