Thursday, September 3, 2015

vaanam boomiyo paraaparan manidan

வானம் பூமியோ? பராபரன்
  பல்லவி

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி

ஞானவான்களே, நிதானவான்களே, - என்ன இது? – வானம்

சரணங்கள்

1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம்

2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்ம
கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம்

3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம்

4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்லளூ
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம்

5. சீயோனின் மகளே, இனி திரிந்தலையாதே
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம்

No comments: