வானம் பூமியோ? பராபரன் | |
பல்லவி வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, - என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை, பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன், நித்ய பிதாவினோர்ம கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி, நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்லளூ மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம் 5. சீயோனின் மகளே, இனி திரிந்தலையாதே மாயமென்ன? உனக்குச் சொல்லவோ? வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம் |
lyrics
Thursday, September 3, 2015
vaanam boomiyo paraaparan manidan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment