போதுமானவரே புதுமையானவரே | |
போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் 2. பாவங்கள் சுமந்ததனால் - நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன் மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் எனக்காக அவமானமடைந்து - உம் மகிமையிலே பங்குபெறச் செய்தீர் 4. சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர் சாபங்களை சுமந்து கொண்டதால் - நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் |
No comments:
Post a Comment