Thursday, September 3, 2015

KADHIRAVAN ELUGINDRA KAALAIYIL IRAIVANAI

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே - என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் - உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை - சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் - காக்கிறார்.

No comments: