Thursday, September 3, 2015

ONDRUMILLAI NAAN ANBU ENAKIRAVITTAL

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

சரணங்கள்

1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

No comments: