Thursday, September 3, 2015

IYAYYA NAAN PAAVI ENNAI AALUM

ஐயையா, நான் பாவி - என்னை
ஆளும் தயாபரனே!

சரணங்கள்

1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன் – ஏ
சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
ஐயா, என் தாதாவே --- ஐயையா

2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனை தீதுகளோ? - எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே --- ஐயையா

3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
மாலமோ, ரண்டகமோ? – மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
சமஸ்த நன்மைக் கடலே --- ஐயையா

4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
பொறாமையும், ஆணவமும், விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
ஏகதிரித்துவனே --- ஐயையா

5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துன தடியார்களையும் – நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும், பராபரனே --- ஐயையா

No comments: