Monday, February 26, 2018

NAAL MULUTHUM PAADA VARAM LYRICS

பல்லவி  
நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான்  
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான் 
சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்  
சிலுவையில் எனக்காய் மரித்தவனே  
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்  
தரணியில் எங்கும் நிறைந்தவனே
இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்  
இறைவனின் பாதம் எனக்கது போதும்  
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்  
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே

No comments: