பல்லவி
நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
நாதனே உன்னை நான்
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
நாதனே உன்னை நான்
நாதனே உன்னை நான்
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
நாதனே உன்னை நான்
சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்
சிலுவையில் எனக்காய் மரித்தவனே
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்
தரணியில் எங்கும் நிறைந்தவனே
சிலுவையில் எனக்காய் மரித்தவனே
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்
தரணியில் எங்கும் நிறைந்தவனே
இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்
இறைவனின் பாதம் எனக்கது போதும்
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே
இறைவனின் பாதம் எனக்கது போதும்
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே
No comments:
Post a Comment