Thursday, February 22, 2018

NEER SEITHA ATHISAYAM LYRICS


நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே

No comments: