Friday, June 12, 2015

NAAN UNNAIVITTU VILAGUVATHILLAI

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் – 2
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2


2.திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடன் இருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – 2
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

3.அனுதினமும் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம்போல் செழித்திடுவாய் – 2
நான் ஆசையாய் உண்ணக் கனிக்கொடுப்பாய் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

No comments: