Friday, June 12, 2015

NEER ENNODU IRKKUMPOTHU

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2
தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

1.மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2


2.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே – 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2


3.மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே –2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

No comments: