Friday, June 12, 2015

BOOMIYIN KUDIGALE ELLARUM KARTHARAI

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே

1. சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின் லீலியே
பரிசுத்தர் என் நேசர் அவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்

2. வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

3. வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

4. முற்றும் அழகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே

No comments: