Friday, June 12, 2015

THETTRARAVAALAN YESUVE

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2

தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

1. வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2
பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

2. இருண்ட வாழ்க்கை பாதையிலே  
இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் – 2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

3. மனுஷரின் வார்த்தை மாறாகி
  மனதினில் துயரங்கள் அழுத்துகையில் -2
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் –2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே –2

தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

No comments: