Friday, June 12, 2015

BALIYIDU THUTHI BALIYIDU

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே – 2
யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய் – 2
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது – 2
கண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின – 2
அதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும் -2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

No comments: