Friday, June 12, 2015

NIRMULAMAGATHIRUPPATHU UNTHAN MAA KIRUBAI

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்

கிருபை கிருபை
மாறாத கிருபை


1.கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2


2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2


3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

No comments: