Friday, June 12, 2015

NEER SEITHA NANMAIKALAI NINAIKINDREN

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


1. பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


2. நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம்நொந்து
மடிகின்ற நேரத்தில்
மகன் என்னைத் தேடி வந்தீரே

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


3. நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2

No comments: