Thursday, July 30, 2015

YESU NASARAYIN NADHIPATHIYE

யேசு நசரையி னதிபதியே, - பவ நரர்பினை யென வரும்.

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. --- யேசு

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. --- யேசு

2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். --- யேசு

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். --- யேசு

No comments: