விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; - மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; - முழுவிஷமான பாவத்தினால் இறந்தோர். --- விசு
2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; - நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. --- விசு
3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; - எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். --- விசு
4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; - அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். --- விசு
5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? - அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். --- விசு
6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; - தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். --- விசு
No comments:
Post a Comment