Thursday, July 30, 2015

MALAIMAA NADHIYO MIGU AAL KADALO

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ - எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

சரணங்கள்

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்
மெள்ள மெள்ள நடந்தே எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே --- மலைமா

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே --- மலைமா

3. பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்
ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே --- மலைமா

No comments: