Thursday, July 30, 2015

VALLAMAI THEVAI DEVA

 

 வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்

2. நித்திய காலம் வாசம் செய்யும்
சத்திய ஆவியைத் தாரும்
திக்கற்றோனாய் விட்டிடாமல்
தேற்றரவாளனாய் வந்திடும் - பொழிந்திடும்

3.மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

No comments: