Thursday, July 30, 2015

AA VARUM NAAM ELLARUM KOODI

வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!

சரணங்கள்

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் --- வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் --- வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் --- வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் --- வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் --- வாரும்

No comments: