Thursday, July 30, 2015

MOTCHA YAATHRRAI SELGIROM

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் - இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

பல்லவி

ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே --- ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே

4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே - இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் --- ஆனந்தமே

No comments: