Thursday, July 30, 2015

MARANTHEDATHE NEE MANNAN YESUVIN

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

சரணங்கள்

1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் - சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் - இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் - சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் - இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே - தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் - இவர்களை

No comments: