Thursday, July 30, 2015

CHINNACHIRU SUDANE ENNARUM THAVAME

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு

தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ

2. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ

பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ

No comments: