Thursday, November 7, 2019

ANDAVAR ALLUGAI SEIKIRAR

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்

2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்

3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்

4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்

No comments: