Thursday, November 7, 2019

ITHU ATHISAYAME ENAKAANANTHAME

இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் - தேவ

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே -எந்தன்

சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்

பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்

No comments: