Thursday, November 7, 2019

ISRAVELAE UNNAI EPPADI KAIVIDUVEN

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

எப்படிக் கைவிடுவேன்
எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை

நானேதான் உன்னைக் குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ

கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்

முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

No comments: