Thursday, November 7, 2019

AAVIYAI ARULUMAE SUVAAMEE

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே 

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ? 
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ? 
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ? 
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம், 
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் , 
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு, 
திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை

No comments: