Thursday, November 7, 2019

IMMANUELIN RATHATHAL NIRAINTHA

இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே 
எப்பாவத் தீங்கும் அதினால் 
நிவிர்த்தியாகுமே 

பல்லவி

நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! 
இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார் 
பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
தேவனைத் துதியுங்கள் 

2. மா பாவியான கள்ளனும் 
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான் --- நான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன் --- நான்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை 
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் --- நான்

5. பின் விண்ணில் வல்ல நாதரை 
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன் --- நான்

No comments: