Thursday, November 7, 2019

KADAL ENNUM ULAGHIL

கடல் என்னும் உலகில்
படகு என்னும் பயணத்தில்
கரை தேடி திரியும் மகனே

கடல் என்னும் உலகில்
படகு என்னும் பயணத்தில
கரை தேடி திரியும் மகளே

கரைகள் நிறைந்த வாழ்வு
குறைகள் ஏராளம் ஏராளம்
அலைமோதும் அலைகளோ எங்கும்

என்னை மீட்க யாருமில்லை
எங்கும் திரும்ப இருள்
என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே

வெள்ளிச்சம் தேடி கண்கள்
துடுப்பை பிடிக்க கரங்கள்
கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே

செய்வதறியாமல் நானும்
பயமும் திகைப்பும்
என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ

கண்டேன் கலங்கரை விளக்கை

கண்டேன் வெள்ளை சிங்காசனம்
கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை

கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் என்னோடு

கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் உன்னோடு

No comments: