Wednesday, May 23, 2018

KALVARIYE KALVARIYE KAL MANAM LYRICS


கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்
1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

No comments: