Wednesday, May 23, 2018

VAANATHAIYUM BOOMIYAYUM VAARTHAIYINAAL LYRICS

வல்லமையின் தேவனே
வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
எரிகோ கோட்டையை உடைத்தவரே
குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
உம் வல்லமையை நினைத்தே
வியக்கிறேன் தெய்வமே
வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே 
மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி 
பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது 
உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது
உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா

No comments: