Wednesday, May 23, 2018

ENGE SUMANTHU POGIREER LYRICS


எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா – எங்கே
2. தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, – எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே

No comments: