Wednesday, May 23, 2018

KANDEN EN KAN KULIRA LYRICS


கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்
7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்

No comments: