Wednesday, May 23, 2018

ASATHIKOLLATHIRUNGAL JAKIRATHAIYAYIRUNGAL LYRICS

அசதிக்கொள்ளாதிருங்கள் 
ஜாக்கிறரதையாயிருங்கள்     
ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள்  
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்   
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை 
விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்  
 - (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்   
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)

No comments: