Monday, August 13, 2018

YESUVIN IRANDAM VARUGAI ATHI LYRICS


இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா
1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார்
2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் வருகிறார்
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார்
3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார்
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார்

No comments: