Monday, August 13, 2018

KARTHARIN PANTHIYIL VAA SAGOTHARA LYRICS

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா 
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின் 
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? 
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ? 
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ 
தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின் 
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் 
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின் 
3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே 
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு 
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

No comments: