Monday, August 13, 2018

MAGILCHIYODAE AVAR SANATHI MUNNE LYRICS

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே (சங் 100:2)
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி (சங் 134:2)
கெம்பீரமாய் துதித்திடுவோம்
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை (சங் 66:2)
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக் கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில் (ஆதி 28:15)
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே (சங்கீதம் 89:33)
2. பகைஞர் முன்பு பந்தியன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா (சங்கீதம் 23:5)
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா (யோசுவா 4:14)
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே
3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாகச் சென்றேனைய்யா (லூக்கா 15:28)
தேடி வந்து வாக்குத்தந்து
மறுபடி வாழச் செய்தீரைய்யா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே
Scale Change
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

No comments: