Thursday, May 17, 2018

STHOTHIRAM YAESU THEVA LYRICS

ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரமே நாதா           ஆ!  ஆ!!
ஸ்தோத்திரம் தேவா

               சரணங்கள்
1.      அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்
  என் போல் ஈனருக்காமோ      -    ஆ!
  உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்
  தன் உயிர் தந்த தயாளா        -  ஆ!  ஆ!!

2.   மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா
    ஆட்கொண்ட அருள் நிறை வேதா
    காட்டினீர் கருணை கல்வாரி தனிலே
    நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ!  ஆ!!

3.  துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்
   நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்
   என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்
   உம் மார்க்கம் ஒன்றே போதும்      - ஆ!  ஆ!!

4.  இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்
   மருள்தனை மாற்றிய மன்னா
   அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா
   திருவழி திறந்த தியாகா        -  ஆ!    ஆ!!

No comments: