Thursday, May 17, 2018

KATHAI ONNU SOLLA PORAENGA LYRICS

 பல்லவி
      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
      இயேசு சொன்னக் கருத்தை அதில்
      நல்லாவே கேளுங்க                         - கதைஒண்ணு

சரணங்கள்
1.   இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
      இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
      காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
      காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு         - கதை ஒண்ணு

2.   மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
      மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
      தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
      தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்  - கதை ஓண்ணு

3.   நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
      நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
      பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி

      பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்          -  கதை ஒண்ணு

No comments: