Thursday, May 17, 2018

ALAIKUM SATHAM KETKALAIYO LYRICS

 பல்லவி

அழைக்கும் சத்தம் கேட்கலையோ
அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ

அனுபல்லவி

மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்
தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் - அவர

 சரணங்கள்

1.       காணாத ஆட்டை தேடினவர்
         கானகத்தில் குளிர் நீரானவர்
         மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2)
         மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர்

2.       குஷ்டரோகியைக் குணமாக்கினவர்
         கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர்
         துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2)
         இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர்  (2) – அவர்

3.       சீஷர்கள் கால்களைக் கழுவினவர்
         பாசமாய் சிறுவரை நேசித்தவர்
         நீசராம் நம்மை திருத்திட எண்ணி  (2)
         கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2) – அவர்

4.       வருந்திய மக்களை மகிழ்வித்தவர்
         திருந்திய மக்களை இரட்சித்தவர்
         வேதனையோடு தொங்கிய போதும் (2)
        வேதனை செய்தவரை மன்னித்தவர் (2) – அவர்

No comments: