Tuesday, December 22, 2015

Kurusinmel kurusinmel kaankindrathaarivar

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

No comments: