கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே
தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்
காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு
பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா
சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்
No comments:
Post a Comment