Tuesday, December 22, 2015

Kalvariye kalvariye oppadra


கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே

தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்

காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு

பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா

சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்

No comments: