Tuesday, December 22, 2015

Ennavale jeevan viduththiro swamy

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
எனால் உமக்கென்ன லாபம் யேசு
மனா பரப்ரம திருவுளமோ இது

சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி
விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே
ஆண்டவா அது பக்கிஷ நேசமே

No comments: