Tuesday, December 22, 2015

Aariraro solli paadungal

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்

1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

No comments: