Tuesday, December 22, 2015

Kolkothave kolai marame


கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

No comments: