கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே
கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா
என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ
வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே
No comments:
Post a Comment