Tuesday, December 22, 2015

Deva Loga Ganame thuthar

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

No comments: