Tuesday, March 3, 2020

KALANGINA NERANGALIL KAI THOOKI

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ

மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.

No comments: