Tuesday, March 3, 2020

THOAL MEETHU SUMANDHATHAL THAGAPPAN

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்பதா?
மார்போடு அணைத்ததால்
அன்னை என்பதா?
என்னோடு நடந்தால்
நண்பன் என்பதா?
என்னவென்று சொல்ல
எல்லாம் நீரப்பா
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும்
கண்டதில்லையே
உந்தன் அன்பு போல இங்கு
எதுவும் இல்லையே
உண்மையுள்ள தெய்வம்
நீரே இயேசப்பா 
உம்மை போல பேச ஆசை
எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை
எந்தன் எண்ணத்தில்
உம்மை போல மாற ஆசை
எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும்
எந்தன் இயேசுவே

No comments: