Tuesday, March 3, 2020

KARTHTHARILUM THAM VALLAMAIYILUM

கர்த்தரில் பெலப்படுவோம்

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையால் அனைவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்
சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்

2. மாமிசம் இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத

3. சத்தியமாம் கச்சையை கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத

4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்
விசுவாசம் என்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத

5. இரட்சண்யமாம் தலைச்சீராவும்
எச்சனமும் அணிந்துகொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத

5. எந்தச் சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காக ஆவியினால்
மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

No comments: